/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்
/
மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்
ADDED : ஜூன் 24, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள பூவாண்டிபட்டியில் தேசிக நாதர் அறக்கட்டளை சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை செயலர் மு.தண்ணீர்மலை வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் அண்ணாமலை தலைமையேற்றார். நிதி அறிக்கையை அறக்கட்டளை பொருளாளர் கண்ணப்பன் வாசித்தார். கும்பாபிஷேக கமிட்டி தலைவர் பள்ளத்துார் நாச்சியப்பன்,நிர்வாகிகள் சிதம்பரம், சுப்பிரமணியன் பேசினர்.
மாணவர்களுக்கு கல்வி நிதியை ராமநாதன், கண்ணப்பன், சுப்பிரமணியன் வழங்கினர். அறக்கட்டளை துணைச் செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.