ADDED : ஜூலை 01, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கையில் பொது குறைதீர் கூட்டம் கலெக்டர்ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. பட்டா, மகளிர் உரிமை தொகை, வேலைவாய்ப்பு கோரி 576 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், தொழிலாளர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவி என 56 பயனாளிகளுக்கு ரூ.31.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.