sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை

/

திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை

திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை

திருக்கோஷ்டியூர் ஊரணி சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 05, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்: - திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோஷ்டியூரில் சேங்கை ஊரணிக்கான வரத்துக்கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருக்கோஷ்டியூரில் மேல்நிலைப்பள்ளி, அய்யனார் கோயில் அருகே சேங்கை ஊரணி உள்ளது. முன்பு பொதுமக்களால் குடிநீர் ஊரணியாக பயன்படுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்தில்லாமல் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஊரணியில் 2022 ல் ரூ.9.95 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன.

கரைகள் சேதமடைந்து, போதிய சுற்றுச் சுவரின்றி காணப்படுகிறது. நகரின் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து வடிந்து ஊரணி சுகாதாரக் கேடாக உள்ளது. மக்கள் பயன்பாடின்றி உள்ள இந்த ஊரணிக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்படுத்த சோலுடையான்பட்டி இரட்டைக் கண்மாயிலிருந்து வரத்துக் கால்வாய் சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தி, சுற்றுச்சுவர் எழுப்பவும், நடைபாதை அமைக்கவும், முள்வேலியிட்டு படித்துறை கட்டவும் அப்பகுதியினர் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us