/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொத்தடிமையாக இருந்த 4 பேர் மீட்பு
/
கொத்தடிமையாக இருந்த 4 பேர் மீட்பு
ADDED : ஜூலை 10, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 9 வயது குழந்தை, முதியவர் ஆகிய நான்கு பேர், 1.30 லட்சம் ரூபாய் கடனை அடைக்க, சிவகங்கைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக வந்துள்ளதாக தேவகோட்டை தாசில்தார், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தேவகோட்டை தாலுகா, புளியால் அருகே சின்ன பிரம்புவயல் கிராமத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமையாக இருந்த நான்கு பேரை மீட்டனர்.
இதையடுத்து, மத்திய அரசு வழங்கும் கொத்தடிமை மீட்பு நிதி தலா, 30,000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணியில் தொழிலாளர் நலத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.