/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய சாலைகள்
/
ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய சாலைகள்
ADDED : ஜூலை 18, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : 18 வார்டுகளை கொண்ட சிங்கம்புணரி பேரூராட்சியில் மக்கள் நெருக்கமும் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. வார்டுகளில் பல இடங்களில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சிறிய லாரிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு இருபுறமும் ஆக்கிரமித்து சாலைகளை மூடியுள்ளனர். அவ்வழியாகச் செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அனைத்து வாடுகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.