/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏற்புடையதல்ல
/
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏற்புடையதல்ல
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏற்புடையதல்ல
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏற்புடையதல்ல
ADDED : ஜூன் 23, 2024 09:35 AM
சிவகங்கை, : ''கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது ஏற்புடையதல்ல.
இது கள்ளச்சாராம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவே உள்ளது,'' என, சிவகங்கையில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாருன் ரசீத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் ஜனநாயகம், மக்கள் விருப்பத்திற்கு எதிராக நடக்கும் என்பதால் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது.
தி.மு.க., அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்காதது இன்று 55 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் அருகில், அரசின் முக்கியமான அலுவலகங்கள் இயங்கக்கூடிய பகுதியில் தினமும் கள்ளச்சாராயம் குடிக்கிற இடம் இயங்கியுள்ளது.
இது அரசின் நிர்வாகத் தோல்வியையே உணர்த்துகிறது. கள்ளச் சாராயம் விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள் இறக்கவும் அனுமதி அளிக்கக்கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கியது ஏற்புடையது அல்ல.
கள்ளிக்குறிச்சியில் கள்ள சாராயத்தால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை மாநில அரசு ஏற்பதை வரவேற்கிறோம் என்றார்.