ADDED : பிப் 27, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் மூலம் 1,569 மாணவர்களுக்கு ரூ.16.21 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உயர்கல்வி பெறுவோருக்கு மத்திய அரசின் வித்யாலட்சுமி' இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த விண்ணப்பத்தை மாவட்ட நிர்வாகமும், முன்னோடி வங்கி மூலம் பரிசீலனை செய்தனர். கடந்த ஆண்டில் (2023--2024) 2,260 மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.35.64 கோடி வரை கல்வி கடனாக பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் (2024-=2025) 1,569 மாணவர்கள் ரூ.16.21 கோடி வரை கல்வி கடன் பெற்றுள்ளனர்.