ADDED : ஏப் 10, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை : சிவகங்கை அருகே ராகிணிபட்டியில் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் லெனின் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லங்குடியில் இருந்து டூவீலரில் சிவகங்கையில் டி.வி., வாங்க போவதாக கூறி சசிக்குமார் மனைவி மாதவி சென்றார்.
அவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.52 ஆயிரத்து 860 யை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.
