/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா
/
சத்ய சாய் சமிதியில் சிவராத்திரி விழா
ADDED : பிப் 28, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்சாய் சேவா சமிதியில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அனுக்கை மற்றும் விநாயகர் பூஜையுடன் சிவராத்திரி விழா தொடங்கியது.
தொடர்ந்து இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:00 மணி வரை, பொதுமக்கள் உட்பட பலரும் சாய் லிங்கோத்பவருக்கு அபிஷேகம் செய்தனர்.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ சத்ய சேவா மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், சமிதி கன்வீனர் திருநாவுக்கரசு மற்றும் சமீதி உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

