sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா மே 12ல் துவக்கம் மே 20 ல் தேரோட்டம்

/

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா மே 12ல் துவக்கம் மே 20 ல் தேரோட்டம்

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா மே 12ல் துவக்கம் மே 20 ல் தேரோட்டம்

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா மே 12ல் துவக்கம் மே 20 ல் தேரோட்டம்


ADDED : மே 07, 2024 05:21 AM

Google News

ADDED : மே 07, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரி சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழா மே 12 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 20ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி திருவிழா மே 12 ல் மதியம் 1:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தினமும் சுவாமி காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு கேடயம், வெள்ளி மூஷிகம், அனுஷம், சிம்மம், பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி கேடயத்தில் வலம் வருகிறார். விழாவின் 5 ம் நாளான மே 16 அன்று இரவு 7:00 முதல் 8:00 மணிக்குள் திருக்கல்யாணம், அனந்த சயனம் நடைபெறும். விழாவின் 9ம் நாளான மே 20 அன்று மதியம் 2:00 முதல் 3:00 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள்வார்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் தேரடியில் தேங்காய் உடைத்தும், பழங்களை வீசியும் நேர்த்தி செலுத்துவர். விழாவின் 10 ம் நாளான மே 21 அன்று காலை தீர்த்தவாரி உற்ஸவம், இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேசன், அடைக்கலங்காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us