sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி

/

சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி

சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி

சிவகங்கை-மதுரை அரசு பஸ்சில் மழை நீர் ஒழுகியதால் அவதி


ADDED : ஜூலை 14, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் மழை நீர் உள்ளே ஒழுகுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 5 கிளைகள் உள்ளது.இதில் 285 புறநகர் பஸ்களும்,100 டவுன் பஸ்களும் இயக்கப்படுகிறது.

மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலும் மிகவும் பழையதாகவும் தடதட வென்ற சத்தத்துடன் செல்கிறது. பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள், ஜன்னல் மற்றும் மேற்பகுதி மிகவும் மோசமாக உள்ளது.

மழை நேரங்களில் சில பஸ்களில் தண்ணீர் உள்ளே ஒழுகுகிறது. நேற்று முன்தினம் மாலை 6:15க்கு சிவகங்கையில் இருந்து மதுரை சென்ற TN.63 N 1570 என்ற அரசு பஸ்சின் உட்பகுதி முழுவதும் மழைநீர் வந்துள்ளது. இந்த பஸ்சில் பயணித்த அனைவரும் மழையில் நனைந்தபடியே பயணம் செய்து அவதிப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us