sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் 'நீட்' தேர்வு: 1806 மாணவர்கள் பங்கேற்பு; 68 பேர் ஆப்சென்ட்

/

சிவகங்கையில் 'நீட்' தேர்வு: 1806 மாணவர்கள் பங்கேற்பு; 68 பேர் ஆப்சென்ட்

சிவகங்கையில் 'நீட்' தேர்வு: 1806 மாணவர்கள் பங்கேற்பு; 68 பேர் ஆப்சென்ட்

சிவகங்கையில் 'நீட்' தேர்வு: 1806 மாணவர்கள் பங்கேற்பு; 68 பேர் ஆப்சென்ட்


ADDED : மே 06, 2024 12:17 AM

Google News

ADDED : மே 06, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கையில் நேற்று 5 மையங்களில் நடந்த 'நீட்' எழுத்து தேர்வில் 1,874 மாணவர்களில், 68 பேர் ஆப்சென்ட் ஆகினர். நீண்ட பரிசோதனைக்கு பின்னரே மாணவ, மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். மாணவர் பாதுகாப்பிற்கு தேர்வு மையம் முன் ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மாவட்டத்தில் சிவகங்கை கேந்திரியா வித்யாலயா, சுந்தரநடப்பு மான்போர்ட் சி.பி.எஸ்.சி., திருப்புவனம் லாடனேந்தல் வேலம்மாள் பள்ளி, காரைக்குடி கேந்திரிய வித்யாலயா, செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய 5 மையங்களில் நேற்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை 'நீட்' தேர்வு நடைபெற்றது.

இதில், பங்கேற்க நேற்று காலை 11:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை மாணவ, மாணவிகள் தேர்வு மையம் முன் கூடினர். அவர்களை பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். இத்தேர்வில் 1,874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,806 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். இத்தேர்வில் 68 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us