sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

செட்டிகுறிச்சி துவக்கப்பள்ளியில் நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு

/

செட்டிகுறிச்சி துவக்கப்பள்ளியில் நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு

செட்டிகுறிச்சி துவக்கப்பள்ளியில் நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு

செட்டிகுறிச்சி துவக்கப்பள்ளியில் நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 05, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே செட்டிகுறிச்சி அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் உள்ள துவக்க பள்ளிகளில் ஒன்றான இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஏற்கனவே 2 கான்கிரீட் கட்டடங்களும் ஒரு ஓட்டு கட்டடமும் இருந்த நிலையில், ஒரு கான்கிரீட் கட்டடம் பழுது காரணமாக இடிக்கப்பட்டது. விரைவில் மாற்றுக் கட்டடம் கட்டித் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் ஒரு வருடத்தை கடந்தும் இன்னும் புதிய கட்டடம் கட்டித் தரப்படவில்லை. ஓட்டு கட்டடமும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் இட நெருக்கடியில் படித்து வருகின்றனர்.

பள்ளியில் போர்வெல் அமைப்பதற்காக போர்வெல் வாகனம் செல்வதற்கு வசதியாக காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது.

பல மாதங்கள் ஆகியும் அந்த இடத்தில் மீண்டும் சுவர் கட்டப்படாததால் வலை கொண்டு மூடி வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

இதனால் மாடுகள் பள்ளிக்குள் வந்து செல்கின்றன. எனவே கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் காம்பவுண்ட் சுவரையும் உடனடியாக கட்டித் தர பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us