sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம் 

/

துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம் 

துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம் 

துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம் 


ADDED : செப் 07, 2024 05:22 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வரப்பில் துவரம், உளுந்து சாகுபடிக்கு மானியம் தரப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இத்திட்டத்தின் கீழ் 89 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வரப்பு பயிராக துவரை, உளுந்து சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து, முதன்மை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் வருவதற்கும் பயனுள்ள திட்டமாக உள்ளது.

தற்போது துவரை சாகுபடி பரப்பு குறைந்து வருவதால், உளுந்திற்கு மாற்றாக துவரை விதைக்கலாம். உளுந்து எக்டேருக்கு 5 கிலோ, 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சம் ரூ.300 வீதம் வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் வரை மானியம்தரப்படுகிறது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்யலாம்.

மேலும் உதவி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us