/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசின் கல்வி உதவித்தொகைக்கு தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல்
/
அரசின் கல்வி உதவித்தொகைக்கு தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல்
அரசின் கல்வி உதவித்தொகைக்கு தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல்
அரசின் கல்வி உதவித்தொகைக்கு தபால் நிலையத்தில் கணக்கு கண்காணிப்பாளர் தகவல்
ADDED : ஜூலை 01, 2024 10:03 PM
சிவகங்கை:
பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவக்க ஜூலை 15 வரை சிறப்பு முகாம் நடைபெறும் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்திய அஞ்சல்துறையும், கல்வித்துறையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை வரவு வைக்கும் வகையில் பயனீட்டு தொகை பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித குறைந்த பட்ச தொகையும் இன்றி 'ஜீரோ' பேல்ன்ஸ்- அஞ்சலக சேமிப்பு மற்றும் ஐ.பி.பி.எஸ்., கணக்கு துவக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவக்க, மாணவர்கள் ஆதார் அட்டை, அடையாளஅட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பெற்றோரின் அலைபேசியுடன் வர வேண்டும். இதற்காக சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் மையம் செயல்படும்.
இது தவிர சில துணை தபால் நிலையங்களிலும் ஆதார் மையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வி உதவி தொகையை தபால் சேமிப்பு கணக்கில் பெற ஏதுவாக கணக்கு தொடங்கலாம். இதற்கான சிறப்பு முகாம் தபால் நிலையங்களில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்.