/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனி நபர் தரிசு நிலம் 1200 எக்டேரை விளை நிலங்களாக மாற்ற இலக்கு வேளாண்மை அதிகாரி தகவல்
/
தனி நபர் தரிசு நிலம் 1200 எக்டேரை விளை நிலங்களாக மாற்ற இலக்கு வேளாண்மை அதிகாரி தகவல்
தனி நபர் தரிசு நிலம் 1200 எக்டேரை விளை நிலங்களாக மாற்ற இலக்கு வேளாண்மை அதிகாரி தகவல்
தனி நபர் தரிசு நிலம் 1200 எக்டேரை விளை நிலங்களாக மாற்ற இலக்கு வேளாண்மை அதிகாரி தகவல்
ADDED : ஜூன் 20, 2024 04:44 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 1,200 ஏக்கர் தனி நபர் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமி பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கென 89 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மற்றும் இதர கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் உள்ள முட்புதர், மரங்கள், சிறு கற்களை அகற்றி, நிலங்களை சமன் செய்து உழுவதற்கு நிதி உதவி அளிக்கப்படும். விவசாயிகள் தனிப்பட்ட முறையில் தாங்களே நிலத்தை சரி செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு எக்டேருக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9,600 வரை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் வரை மானியம் வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சீர்செய்யப்பட்ட தரிசு நிலங்களில் பயிர்களை தேர்வு செய்து, சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 1,200 எக்டேரில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.