ADDED : ஏப் 27, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி வள்ளியங்கருப்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஏப்.25ம் தேதி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு வள்ளியங்கருப்பு, சின்னக்கருப்பு, ஆகாச வீரன், துவராள்பதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

