sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்  கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும்   7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் 


ADDED : ஜூலை 16, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 24 ஆண்டிற்கு பின் ஆக.,22ல் நடைபெற உள்ளது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்மன் நின்ற கோலத்தில் 4 திருக்கரங்களுடன், கலியுகக் கற்பக விருட்சமாக காட்சி தருகிறார். கேட்ட வரம் தரும் தாய்க்கு தாயாகவும், காமதேனுவாகவும் அம்மன் திகழ்கிறார்.

இக் கோயிலில் 2000 ம் ஆண்டு செப்., 3 ம் தேதி 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கோயிலுக்கு கும்பாபிேஷகம் செய்தனர். அதற்கு பின் 24 ஆண்டு கழித்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1.27 கோடி செலவில் 3 நிலை ராஜகோபுரத்தை 7 நிலையாக உயர்த்தி கட்டியதோடு, கோயில் பிரகாரம், உற்ஸவ சுவாமிகள் புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆக. 22 ல் கும்பாபிேஷகம்


இக்கோயிலில் ஆக., 19 அன்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்குகிறது. அன்று மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

ஆக., 20 அன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெறும். ஆக., 21 அன்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.

ஆக., 22 அன்று காலை 5:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்குகிறது. காலை 8:00 மணி முதல் 9:15 மணிக்குள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.

அன்று மாலை 4:30 மணிக்கு மகா அபிேஷகம்,தீபாராதனை நடைபெறும். யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படும்.

பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன்தலைமையில் கோயில் ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us