ADDED : ஜூலை 18, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே சுவாமி நாராயணபுரத்தில் சிறப்பு எஸ்.ஐ., ஜெகதீச ராஜா வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தனர். அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, டிராக்டர் டிரைவர் மணமேல்குடி பசுபதி மகன் சிவக்குமாரை 44 கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் சின்னையன் 62 என்பவரை தேடி வருகின்றனர்.