ADDED : மார் 09, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில்ராயன் கருப்பன் கோயிலில் மாசிக்களரி திருவிழா நடந்தது.
மார்ச் 7ல் முழுவீரன் தெரு கோயில் வீட்டில்இருந்து வேல், அரிவாள் உள்ளிட்ட சாமி ஆயுதங்களை விழாக்குழுவினர்ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
வேங்கைப்பட்டி ரோடு புதுவயலில் உள்ள ராயன் கருப்பன் கோயிலில் ஆயுதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவிழா துவங்கியது. இரவு 9:00 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது.
பாலாற்றில் இருந்து அம்மன் சாமியாடி கரகம் சுமந்து வந்தார். இரவு கோயிலில் சாமியாட்டம் நடந்தது.
நேற்று காலை மண் பானையில் பொங்கல் வைத்து, கிடா பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.