ADDED : மே 05, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருவுடையார்பட்டியை சேர்ந்த சௌந்தரபாண்டி மனைவி பாண்டிச்செல்வி32.
கணவர் சௌந்தரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாண்டிச்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.