sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்

/

கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்

கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்

கோடை வெயிலால் இழப்பை சந்திக்கும் வியாபாரிகள்


ADDED : மே 09, 2024 05:32 AM

Google News

ADDED : மே 09, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் கோடை வெயில் சிறு வியாபாரிகளை அதிகளவில் பாதித்து வருகிறது.

திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மதுரையில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து திருப்புவனத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

மார்க்கெட்டில் தினசரி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அன்றாடம் விற்பனை செய்வதால் பழங்கள், காய்கறி, கீரை உள்ளிட்டவை புத்தம் புதிதாக இருக்கும். எனவே மக்களும் விரும்பி வாங்குவார்கள். சிறு வியாபாரிகளுக்கு காய்கறி, கீரை வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கோடை வெயில் காரணமாக காய்கறிகள், பழங்கள், கீரைகள் விரைவில் வீணாகி விடுகின்றன. போதிய வியாபாரம் இன்றி நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், மதுரைக்கு அதிகாலை நான்கு மணிக்கு சென்று அகத்தி கீரை, சிறு கீரை, தண்டு கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். காலை ஏழு மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் கீரைகள் காய்ந்து விடுகிறது.

வாடிக்கையாளர்கள் பழைய கீரை என வாங்க மறுக்கின்றனர். தினசரி வட்டிக்கு வாங்கி கீரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம், அனைத்தும் விற்பனை செய்தால் தான் லாபம் கிடைப்பதுடன் மறுநாள் வியாபாரம் செய்ய முடியும், கீரைகள் மட்டுமல்ல காய்கறிகள், பழங்களும் வெயில் காரணமாக வீணாகி வருகின்றன என்றனர்.






      Dinamalar
      Follow us