sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோட்டையூரிலிருந்து வழிபாட்டிற்கு பாரம்பரிய கூட்டு வண்டி பயணம்

/

கோட்டையூரிலிருந்து வழிபாட்டிற்கு பாரம்பரிய கூட்டு வண்டி பயணம்

கோட்டையூரிலிருந்து வழிபாட்டிற்கு பாரம்பரிய கூட்டு வண்டி பயணம்

கோட்டையூரிலிருந்து வழிபாட்டிற்கு பாரம்பரிய கூட்டு வண்டி பயணம்


ADDED : ஜூலை 19, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் வேலங்குடி பகுதி நாட்டார்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக பாரம்பரிய கூட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.

கோட்டையூரில் உள்ள வேலங்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நாட்டார்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் மதுரை மாவட்டம் அழகர் கோயிலுக்கு பயணம் மேற்கொள்வர்.

இக் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கியதும் வேலங்குடி கிராமத்திற்கு கோயிலில் இருந்து திருஓலை அனுப்பப்படுகிறது. ஓலை வந்ததும், பாரம்பரிய பயணத்திற்கு இரட்டை மாட்டு கூட்டு வண்டிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்வர். இந்த ஆண்டு 19 இரட்டை மாட்டு வண்டிகளில் பாரம்பரிய பயணத்தை தொடங்கினர்.

குன்றக்குடி, திருப்புத்துார், எஸ். எஸ். கோட்டை, மேலுார் வழியாக 72 கி.மீ., தங்கள் பயணத்தை மேற்கொண்டு அழகர் கோயிலை சென்றடைவர். அங்கு தீர்த்தமாடுதல் , கிடா வெட்டு, அன்னதானம் நடைபெறும். நாளை நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு அழகர் கோயிலில் இருந்து மாட்டு வண்டியில் சொந்த ஊர் திரும்புவர். பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டு நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொள்வர். இதன் மூலம் கிராமத்தில் ஒற்றுமை மற்றும் உறவுகள் பலமாவதோடு பாரம்பரியமும் காக்கப்படுவதாக பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us