ADDED : மே 10, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குழுவினர்களான 12 ஒன்றிய ஆசிரியர்களுக்கும், கருத்தாளர்களுக்கும் மருதுபாண்டியர் பள்ளி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பரமேஸ்வரன், முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமா பேகம், ஆசிரியர் பயிற்றுனர் முனியப்பன், முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயூ உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பல்வேறு கருத்துகளை வழங்கினர்.