ADDED : செப் 15, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த தண்ணாயிரமூர்த்தி மீது கிராம மக்கள், பெற்றோர்கள் பல்வேறு புகார்களை கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார்மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தியை சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் பள்ளிக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.