/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து தொழிலாளர் கையெழுத்து இயக்கம்
/
போக்குவரத்து தொழிலாளர் கையெழுத்து இயக்கம்
ADDED : ஜூன் 19, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி ; காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில், போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
மண்டலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மண்டல பொதுச்செயலாளர் விஜயசுந்தரம், பொருளாளர் பேரானந்தம் முன்னிலை வகித்தனர். மண்டல துணைச் செயலாளர் ரமேஷ் பாபு, காரைக்குடி கிளை பொருளாளர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டிய 15 வது ஊதிய ஒப்பந்தம், காலிப்பணியிடத்திற்கு நேரடி நியமனம் அவசியம், பழைய பஸ்களை கழித்துவிட்டு, புதிய பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.