ADDED : மார் 09, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் த.வெ.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துபாரதி தலைமை வகித்தார். மகளிர் அணி பொறுப்பாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் லதா, ரஷ்யாபானு, ராஜலெட்சுமி, ரேவதி, செல்வமீனாள், செல்வி, முத்து செல்வி உள்ளிட்டோர் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க கோரியும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.