நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே சிங்கத்துரை பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் செவ்வாய் சாற்று விழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
இதனைத் தொடர்ந்து தினமும் கோயில் முன் பெண்கள் கும்மி கொட்டி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர்.நேற்று சிங்கத்துரைபட்டி அருகே மேலாயூர் கண்மாய் கரையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கரகம் எடுத்துச் சென்று அங்கு பெண்கள் கரகத்தை சுற்றி கும்மி பாட்டு பாடி வழிபட்டு பின்னர் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை,பூஜை நடந்தது.