ADDED : ஜூன் 27, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் முஸ்டாக்குறிச்சி அருகே கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் குமார் 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அலாவூதீன் மண்டல் 24.
இருவரும் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே 820 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.