/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூ--வீலர்கள் மோதி இருவர் பலி; இருவர் படுகாயம்
/
டூ--வீலர்கள் மோதி இருவர் பலி; இருவர் படுகாயம்
ADDED : மார் 10, 2025 11:51 PM
ஆர்.எஸ்.மங்கலம் : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 47. இவர் ஓட்டிச் சென்ற டூ - வீலரும், மதுரை, கல்மேடு கொத்தனார் சந்தனம், 20, ஓட்டிச் சென்ற டூ - வீலரும், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் அலுவலகம் எதிரே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவர்கள், 'ஹெல்மெட்' அணியவில்லை.
தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். சந்தனம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். சந்தனம் டூ - வீலரில் பின்னால் அமர்ந்து சென்ற, விருதுநகர் மாவட்டம், புளியங்குளத்தை சேர்ந்த கொத்தனார் ஈஸ்வரன், 18, மதுரை, பனங்குடி லட்சுமணன், 20, படுகாயமடைந்தனர். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்து குறித்து அறிந்ததும், ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே சம்பவ இடத்திற்கு விரைந்தது. அதில், ஈஸ்வரன், லட்சுமணன் மட்டும் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்த வேறு ஆம்புலன்ஸ், சந்தனத்தை ஏற்றிச் சென்றது. நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காததால், அவர் பரிதாபமாக இறந்தார்.