ADDED : மார் 26, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 10ம் நாளை முன்னிட்டு காலையில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் பராம்பரியமாக காலை 10:50 மணி அளவில் தொழுவிலிருந்து கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. இருப்பினும் நுாற்றுக்கணக்கான மாடுகள் மஞ்சுவிரட்டு திடலுக்கு வெளியே கட்டு மாடுகளாக அவிழ்க்கப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததால், திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

