/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
/
சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
ADDED : மே 31, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது.
யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார்.
பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமிபூஜையை நடத்தி வைத்தார்.
மணப்பட்டி கோயிலில் பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.