ADDED : பிப் 26, 2025 06:53 AM
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடி சாம்பிராணிவாசகர் கருப்பர் கோயில் மாசித் திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு மாசித் திருவிழா நடைபெறும். பிப்.23 இரவில் காப்புக் கட்டி திருவிழா துவங்கியது.
தொடர்ந்து கப்பரையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோயிலிருந்து வீரபத்திரர் வேடத்தில் கருப்பர் கோயிலுக்கு சாமி அழைப்பு நடந்தது.
இன்று சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு அபிஷேகம் நடந்து கிராமத்தினர் கருப்பர் கோயில் வந்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நாளை பாரிவேட்டையை முன்னிட்டு கிராமத்தினர் ஆடல், பாடலுடன் வாண வேடிக்கை கொண்டாட்டம் நடைபெறும்.
மார்ச் 1 முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு சாமியாட்டமும், மார்ச் 2ல் இரண்டாம் திருவிழாவில்  பக்தர்கள் முடி இறக்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல் என்று நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலும், அன்னதான பெருவிழாவும், இரவில் சாமியாட்டமும்  நடைபெறும்.
பிப்.3 ல் மூன்றாம் திருவிழா, பிப். 4ல் மஞ்சள் நீராட்டு விழாவில் கருப்பன்பட்டியில் அரிவாளில் சாமியாட்டமும், தொடர்ந்து கருப்பர் கோயில் வந்து சாமி யாட்டத்துடன் விழா நிறைவடையும்.

