sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..

/

கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..

கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..

கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..


ADDED : நவ 07, 2024 01:34 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசன கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததால் கரை உடைந்து தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிக்கப்படுகிறது.

அ.காளாப்பூரில் உள்ள பாலாறு தடுப்பணையில் இருந்து அருவிக் கால்வாய் வழியாக அருவிக் கண்மாய், கொல்லன்கண்மாய், சுனைக் கண்மாய்,மொச்சிக் கண்மாய் மற்றும் தேனவல்லிக் கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இக்கால்வாய் தேனவல்லிக் கண்மாய் அருகே மூன்று பிரிவு கால்வாயாக பிரிந்து சுனைக் கண்மாய்க்கு ஒரு பிரிவும் மொச்சிக் கண்மாய், புரசன் கண்மாய், மாத்தின்னிக் கண்மாய் போன்றவைகளுக்கு ஒரு பிரிவும், தேனவல்லிக் கண்மாய்க்கு ஒரு பிரிவுமாக தண்ணீர் செல்கிறது.

இதில் தேனவல்லிக் கண்மாய் கால்வாய் ஆழம் இல்லாமல் மேடாக உள்ளதால் கால்வாய் கரையும் அகலம் இல்லாமல் உள்ளது. இதனால் இக்கால்வாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தேனவல்லிக் கண்மாய்க்கு போதிய தண்ணீர் தேக்க இயலாத நிலையில் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இக்கரையில் விவசாயிகள் நடந்துசெல்ல இயலாமல் விழுந்து காயம் அடையும் நிலையில் உள்ளது.

எனவே தேனவல்லிக் கண்மாய் கரையை 50 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு அமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us