sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  

/

காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  

காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  

காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  


ADDED : ஆக 07, 2024 07:59 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் சொர்ணவல்லி, காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அம்மன் தேரை ஏராளமான பெண்கள் இழுத்தனர்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ணவல்லி காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்ஸவ விழா ஜூலை 29 அன்று காலை 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

விழாவின் 9ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சொர்ணவல்லி அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். நேற்று காலை 8:45 மணிக்கு சப்பரத்தில் விநாயகர், மாணிக்கவாசகர் முன்செல்ல, அலங்கரிக்கப்பட்ட அம்பாள் தேரை அனைத்து பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நேற்று காலை 9:35 மணிக்கு நிலையை அடைந்தது.

பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம் வீசி நேர்த்தி செலுத்தினர்.

இன்று காலை காளீஸ்வரர் சொர்ணவல்லி கோயிலில் ஆடிப்பூர சிறப்பு அர்ச்சனை நடைபெறும். ஆக., 8 அன்று ஆடித்தபசு காட்சியும், ஆக., 9 அன்று மதியம் 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us