ADDED : மார் 02, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே சூசையப்பர் பட்டினம் ராமசாமி மகன் செந்தில்குமார் 48. இவர் திரு விழாவிற்கு மைக்செட் அமைக்கும் பணி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நாட்டரசன்கோட்டையிலுள்ள கோவில் திருவிழாவிற்கு மின் அலங்காரம் செய்தார். அப்போது மின் விளக்குகளுக்காக ஜெனரேட்டரை இயக்கியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
11வது வார்டில் அமுதா என்பவரது வீட்டின் முன்பு கட்டி இருந்த பசுமாட்டின் மீது மின் கம்பி விழுந்ததில் பசுமாடு பலியானது.