நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: பி.அழகாபுரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏ.சி.முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் யோகா சிறப்பு முகாம் நடந்தது.
திட்ட அதிகாரி வில்வலிங்கம் தலைமையுரையாற்றினார். தலைமையாசிரியை ஷீலாராணி வரவேற்றார். ஆசிரியைவெண்ணிலா யோகா பயிற்சி குறித்து பேசினார்.
யோகா பயிற்றுநர்கள் சிந்து, சாந்தி, பத்மினி மாணவிளுக்கு பயிற்சியளித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.