ADDED : மார் 07, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே மேலச்சாலுாரைச் சேர்ந்த முருகன் மகன் தெய்வேந்திரன் 24. இவர் நேற்று முன்தினம் இரவு மதகுபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்திற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க சென்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் டூவீலரில் வீடு திரும்பினார். ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி ரோட்டில் திரும்பும் போது ரோட்டில் உள்ள தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.