ADDED : ஆக 17, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே வீரமாமுனிவர் வாசிப்பு இயக்க தொடக்க விழா பள்ளி தாளாளர் தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் ஆரோக்கிய ஈசாக் வரவேற்றார். தலைமையாசிரியர் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மைக்கேல் குரூஸ், நூலகர் வளன் ஆரோக்கிய சேவியர் பேசினர்.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற துணை பொறுப்பாசிரியர் பிலவேந்திர ராஜா புத்தகங்களை தலைமையாசிரியரிடம் வழங்கினார். வாசிப்பு இயக்க செயலாளர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ், துணை பொறுப்பாசிரியர் டெய்சி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.