/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.1.40 லட்சம் புகையிலை பறிமுதல்
/
ரூ.1.40 லட்சம் புகையிலை பறிமுதல்
ADDED : நவ 12, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கல்லல் அருகே தளக்காவூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருப்புசாமி 37. இவர் தளக்காவூரில் மளிகை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதகுபட்டி பகுதியில் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்வதற்காக காரில் சென்றார். மதகுபட்டி போலீசார் இவரது காரை சோதனை செய்தனர். காரில் மளிகை பொருட்களுடன் சேர்த்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது. காரில் இருந்த ரூ.1.40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து கருப்புசாமியை கைது செய்தனர்.