ADDED : ஜூன் 07, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரு சிறுவர்கள் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டனர்.
இங்கு 4 வயது சிறுமி தனது தாத்தா வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த 12, 15 வயதை சேர்ந்த இரு சகோதரர்கள், சிறுமியை மற்றொரு சிறுவன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் சிவகங்கை மகளிர் போலீசார் இரு சிறுவர்களையும் 'போக்சோ'வில் கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
