sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழா

/

 இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழா

 இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழா

 இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழா


ADDED : டிச 05, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இயேசு பிறப்பின் 2025ம் ஆண்டு மாபெரும் ஜீபிலியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர் நிகழ்ச்சியாக இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட் சாதனம் வழங்கும் விழா நேற்று காலை 11:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது.

திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், வேம்பத்துார் மிக்கேல்பட்டினம் பாதிரியார் ஜேம்ஸ் தலைமையில் பாதிரியார்கள் புஷ்பராஜ், மரிய பாக்கியநாதன், ரமேஷ் ராஜா, ஓனாசியஸ், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரபாகரன் நற்கருணை பிரசன்னத்தை துவங்கி வைத்தனர்.

இன்று மதியம் 1:00 மணி வரை நடைபெறும் ஆராதனை விழாவில் பாதிரியார்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், பாதிரியார் பிரின்ஸ் மற்றும் பங்கு இறைமக்கள், திருத்தல நண்பர்கள் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us