/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாரி - சரக்கு வேன் மோதல் தேவகோட்டையில் 3 பேர் பலி
/
லாரி - சரக்கு வேன் மோதல் தேவகோட்டையில் 3 பேர் பலி
ADDED : ஜன 25, 2024 01:40 AM

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே லாரியும் சரக்கு வேனும் மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரக்கு வேனில் பழநி சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு திரும்பினர். வேனை அழகன்குளத்தை சேர்ந்த முகமது அன்வர்தீன் 38 ஓட்டிவந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தேவகோட்டை அருகே திருச்சி- ராமேஸ்வரம் புறவழிச்சாலையில் தளக்காவயல் சர்வீஸ் ரோடு அருகே சென்றபோது எதிரே ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை சென்ற லாரி மீது மோதியது.
இதில் முகமது அன்வர்தீன் 38, வண்டியில் வந்த நம்புராஜன் 60, மனைவி காளியம்மாள் 55 சம்பவ இடத்திலேயே இறந்தனர். அழகன்குளத்தைச் சேர்ந்த வினித், முருகேசன், மாதவன், ஹயாசுள்ளா கான், ஆறுமுகம் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.