ADDED : டிச 05, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற விதைகள் 32 கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் இது வரை 542 விதை மாதிரி சேகரித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் தரமற்றவை 32 விதைகள் என கண்டறிந்து சட்டப்படி இவற்றை விற்பனை செய்த 26 நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்திட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

