sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பறவைகள் சரணாலயத்தில் இன்று 4000 பனை விதை நடவு

/

பறவைகள் சரணாலயத்தில் இன்று 4000 பனை விதை நடவு

பறவைகள் சரணாலயத்தில் இன்று 4000 பனை விதை நடவு

பறவைகள் சரணாலயத்தில் இன்று 4000 பனை விதை நடவு


ADDED : அக் 14, 2025 04:04 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கண்மாய்கரைகளில் இன்று 4000 பனை விதைகள் மாணவர்களால் விதைக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் 6 கோடி பனை மர விதைகள் நட அரசு திட்டமிட்டுள்ளது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் 20 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் துவக்கமாக வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுக்குடிப்பட்டி,சின்னக் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய்கள்,வேட்டங்குடி கண்மாய்களில் பனை விதைகளை விதைக்க உள்ளனர். கலெக்டர் பொற்கொடி துவக்கி வைக்கிறார்.

இன்று சுமார் 200 மாணவர்கள் தலா 20 பனை விதைகள் வீதம் 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய உள்ளனர்.

இத்திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் இணைந்து செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us