ADDED : நவ 09, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் புதுவாடி கிராமத்தில் நேற்று வெறிநாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்றவர்களை விரட்டி கடித்தது.
இதில் 5 பேர் காயமடைந்து எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். புதுவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான தெருநாய்கள் இடையூறாக திரிகின்றன.அனைத்து தெரு நாய்களையும் அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

