sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 

/

மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 

மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 

மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 


ADDED : பிப் 17, 2024 05:09 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.,யினர் 371 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, குறைந்த பட்ச சம்பளம் ரூ.26,000 வழங்கு, மின்சார திருத்த சட்டம், புதிய பென்ஷன் சட்டத்தை திரும்ப பெறு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று சிவகங்கை அரண்மனைவாசலில் ஏ.ஐ.டி.யு.சி.,யினர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., துணை தலைவர் உமாநாத், எல்.பி.எப்., மண்டல தலைவர் முருகன், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம், துணை தலைவர் சகாயம், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரண்மனைவாசலில் மறியலில் ஈடுபட்ட 326 பெண்கள் உட்பட 371 பேரை போலீசார் கைது செய்தனர்.

*காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து செகண்ட் பீட் வரை ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பி.எல் ராமச்சந்திரன் மணவழகன் மாரி ராமராஜ் கண்ணன் சி.ஐ.டி.யு., சார்பில் சேதுராமன் அழகர்சாமி, எல்.பி.எப்., சார்பில் திருநாவுக்கரசு கலையரசன் மற்றும் மாநிலச் செயலாளர் கண்ணகி, மீனாள், சேதுராமன், இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சிவாஜி மாவட்ட குழு உறுப்பினர் முத்து சரவணன் பாலசுப்ரமணியம் ஆரோக்கிய தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us