ADDED : மார் 15, 2026 05:37 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை அருகே தாறுமாறாக ஓடிய கார் கடைகளுக்குள் புகுந்ததில் ஒருவர் இறந்தார். டூவீலர்கள் சேதமடைந்தன.
மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை அருகே நேற்று ராமேஸ்வரம் சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சங்கமங்கலம் கிராமத்திற்கு அருகே உள்ள கடைகளுக்குள் புகுந்து கவிழ்ந்ததில் சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் கடைகளும்,ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களும் சேதமடைந்தன. மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
