sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரே அறுந்து கிடந்த மின் வயர் *குச்சியில் துாக்கிப்பிடித்த வாலிபர்

/

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரே அறுந்து கிடந்த மின் வயர் *குச்சியில் துாக்கிப்பிடித்த வாலிபர்

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரே அறுந்து கிடந்த மின் வயர் *குச்சியில் துாக்கிப்பிடித்த வாலிபர்

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரே அறுந்து கிடந்த மின் வயர் *குச்சியில் துாக்கிப்பிடித்த வாலிபர்

1


ADDED : அக் 06, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று பெய்த கனமழை காரணமாக மின் வயர் சாலையில் அறுந்து விழுந்ததால், விபத்து ஏற்படாமல் இருக்க இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் மின் வயரை குச்சியில் துாக்கிப் பிடித்தபடி நின்றார்.

காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் நகரின் பல இடங்களிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே மின்சார வயர் அறுந்து கிடந்தது. இதனைக் கண்ட சிலர், உடனடியாக வாகனங்களை வேறு வழியில் மாற்றி விட்டனர். அறுந்து கிடந்த மின் வயரால் விபத்து ஏற்படாமல் இருக்க, இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் பஸ் உட்பட வாகனங்கள் செல்வதற்காக வயரை குச்சியால் தூக்கி பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. மின் ஊழியர்கள் மின் வயரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்பு வாகனங்கள் வழக்கம்போல் சென்றது.






      Dinamalar
      Follow us