sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்

/

போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்

போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்

போதாத வெளிச்சத்தால் குறையாத விபத்துக்கள்


ADDED : மார் 31, 2025 07:07 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் தெருவிளக்கு வெளிச்சம் போதாதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

திண்டுக்கல் - - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் சேவுகப்பெருமாள் கோயில் முதல் வேட்டையன்பட்டி வரை 3 கி.மீ., தூரத்திற்கு பல இடங்களில் தெருவிளக்கு வெளிச்சம் பற்றாக்குறையாக உள்ளது.

இச்சாலை சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லைக்குள் உள்ளது. நான்கு ரோடு சந்திப்பை ஒட்டிய சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே முறையான தெருவிளக்கு வசதி உள்ளது.

சேவுகப்பெருமாள் கோயில், ரத வீதி ராமர் கோயில் சுந்தரம் நகர் ஆர்ச் முதல் வேட்டையன்பட்டி வரை சில தெருவிளக்குகள் இருந்தும் வாகன ஓட்டிகளுக்கு பயன் தரும் வகையில் போதவில்லை.

இதனால் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அது சேவுகப்பெருமாள் கோயில் முதல் வேட்டையன்பட்டி வரை குறிப்பிட்ட தூர இடைவெளியில் அதிக வெளிச்சம் தரக்கூடிய உயர்ரக தெருவிளக்குகளை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us